
கண்ணோடு கண் சேரும்போது வார்த்தைகள் எங்கே போகும்?
கண்ணே உன் முன்னே வந்தால் என் நெஞ்சம் குழந்தை ஆகும்.
விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில்
என் எதிர்காலம் நீ தான் என்று உயிர் சொன்னதே!!
வழியில் உன் வழியில் வந்து நடந்தேன் அந்த நொடியில்
என் வழி துணை நீ தான் என்று நிழல் சொன்னதே!!
உன்னோடு வாழ்ந்திட தானே நான் வாழ்கிறேன்.
உன் கையில் என்னை தந்து தோள் சாய்கிறேன் ஓ.. தோள் சாய்கிறேன்.
விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில்
என் எதிர்காலம் நீ தான் என்று உயிர் சொன்னதே!!
வழியில் உன் வழியில் வந்து நடந்தேன் அந்த நொடியில்
என் வழி துணை நீ தான் என்று நிழல் சொன்னதே!!
இது வரை என் இருதயம் இந்த உணர்வினில் தடுமாறவில்லை.
முதல் முறை இந்த இளமையின் சுகம் உணர்கிறேன் நான் தூங்கவில்லை.
குடையோடு நான் போனேன், மழையினில் ஏனோ நனைகின்றேன்.
கடிகாரம் இருந்தாலும் காலடி சத்தத்தில் மணி பார்த்தேன்.
என் தனிமைக்கு தனிமைகள் நீ வந்து கொடுத்தாய்
விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில்
என் எதிர்காலம் நீ தான் என்று உயிர் சொன்னதே!!
வழியில் உன் வழியில் வந்து நடந்தேன் அந்த நொடியில்
என் வழி துணை நீ தான் என்று நிழல் சொன்னதே!!
சிரிப்பிலே உன் சிரிப்பிலே சிறை அடைக்கிறாய் நான் மீளவில்லை.
உறவுகள் ஒன்று சேர்கையில் என்ன ஆகிறேன் என்று தெரியவில்லை.
உன்னோடு நான் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் இனிகிறதே!!
உரையாடல் தொடர்ந்தாலும் மௌனங்கள் கூட பிடிக்கிறதே!!
என் கனவுக்கு கனவுகள் நீ வந்து கொடுத்தாய்!!
விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில்
என் எதிர்காலம் நீ தான் என்று உயிர் சொன்னதே!!
வழியில் உன் வழியில் வந்து நடந்தேன் அந்த நொடியில்
என் வழி துணை நீ தான் என்று நிழல் சொன்னதே!!
No comments:
Post a Comment